Tuesday 7th of May 2024 07:23:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
பைசர் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு  அங்கீகாரம் அளித்தது உலக சுகாதார அமைப்பு!

பைசர் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்தது உலக சுகாதார அமைப்பு!


பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்மூலம் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற உலகின் முதல் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக பைசர் / பயோஎன்டெக் நிறுவன தடுப்பூசி அமைந்துள்ளது.

இந்த அங்கீகாரத்தின் மூலம் இந்தத் தடுப்பூசியை உலக நாடுகள் விரைவாக அங்கீகரித்து இறக்குமதி செய்யவும் வழியேற்பட்டுள்ளது.

கோவிட்19 தடுப்பூசியின் சர்வதேச அணுகலை உறுதி செய்வதற்கான சாதகமான செயற்பாடாக இந்த அங்கீகாரம் அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி மரியாங்கெலா சிமாவோ கூறினார்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கான தடுப்பூசித் தேவையைப் பூா்த்தி செய்ய இன்னும் உறுதியான சர்வதேச முயற்சிகள் அவசியம் என அவா் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம்பற்றிய தரவுகளை உலக சுகாதார அமைப்பு தனது நிபுணர்களையும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிபுணர்களையும் கூட்டி ஆராய்த பின்னரே இதனை அவசர பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கும் முடிவை எடுத்தது.

இந்த ஆய்வில் இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான உலக சுகாதார அமைப்பின் கட்டாய அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளது. இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதன் மூலம் கோவிட்19 தெற்று நோய் அபாயங்களை தவிர்க்கக் கூடிய நன்மைகள் இருப்பதையும் உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது எனவும் அந்த அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி மரியாங்கெலா சிமாவோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE